வெள்ளி, 18 நவம்பர், 2011

கவிதை:முள்வேலி


தமிழா...உன்னை சுற்றி முள்வேலியில்
ரத்தம் சொட்டுகிறது.
தன்னை காயப்படுத்திவிட்டாய் என
வேலி போட்டவனே
அதற்கும் உனை தண்டிக்கிறான்...
"பிழை"த்த நீதியை காத்ததாக
அண்டை நாட்டின் கரகோசம்
உன் அழுகை சத்தத்திற்கும்
அணை போட்டது...!!!
வாழ்க ஜனநாயகம்...வாழ்க இந்தியா...!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக