புதன், 22 டிசம்பர், 2010

சென்னை பல்கலைக் கழகத்தில் ராகுல்காந்தியை அனுமதித்தால் வழக்கு - சீமான்


தமிழகத்தில் இளைஞர் காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்திலும் 2011ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசின் பங்கு குறித்து ஆலோசிக்கவும் அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல்காந்தி வருகிற 22ஆம் தேதி சென்னைக்கு வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ராகுல் காந்தி பங்குகொள்ளும் நிகழ்ச்சி சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"ராகுல்காந்தி பங்கேற்கும் சென்னை அரசியல் நிகழ்ச்சியானது பாரம்பரிய மிக்க சென்னை பல்கலைக் கழகத்தின் நூற்றாண்டு அரங்கத்தில் நடைபெற உள்ளதை நாம் தமிழர் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.சென்னை பல்கலைக்கழக் கழகம்  பாரம்பரியமிக்க கல்லூரி நிறுவனம் ஆகும்.

அரசியல் தலைவரான ராகுல்காந்தி  நிகழ்ச்சி நடைபெற்றால் நிகழ்ச்சி தொடர்பாகவும் அதற்கான ஏற்பாடுகள் காரணமாகவும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வர். இதனால் காவல்துறையின் பலத்த கெடுபிடியும் பல்கலைக் கழகத்தில் இருக்கும். இதனால் அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு அமைதியான கல்வி கற்கும் சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் இதை அனுமதிக்க முடியாது.

மேலும் இதுவரை அவ்வரங்கில் எவ்வித அரசியல் நிகழ்ச்சிகளும் நடைபெற்றதில்லை. முதல்முறையாக ராகுல் காந்தியின் கூட்டத்திற்கு அனுமதி அளித்தால் தவறான முன்னுதாரணமாகி விடும். காவல்துறை ராகுல்காந்தியின் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி அளிப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும்.

இதைமீறி ராகுல் காந்தியின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்கத்தை பல்கலைக்கழக  நிர்வாகம் அனுமதித்தால் நாம் தமிழர் கட்சியின் அரசியல் கலந்துரையாடல் நிகழ்விற்கு வரும் 30ஆம் தேதி அனுமதி அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.ராகுல் காந்திக்கு அனுமதியளித்து விட்டு எங்களுக்கு அனுமதியை நிர்வாகம் மறுத்தால் நீதிமன்றம் 
(தகவல்: http://www.inneram.com)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக